Skip to main content

காஷ்மீர் மக்களின் சீற்றத்தை ராணுவ அடக்குமுறை அடக்கிவிடுமா?

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

பாகிஸ்தானின் ஆசைகாட்டுதலுக்கு ஆளாகாமல் காஷ்மீர் மக்களை தடுத்த ஒரே விஷயம் அவர்களுடைய சுயமரியாதைக்கும், தனித்தன்மைக்கும் உத்தரவாதம் அளித்த 370 ஆவது பிரிவுதான். ஆனால், இப்போது அதையும் மோடி அரசு பறித்திருப்பதால், அவர்கள் கொடூரமாக அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அல்பனா கிஷோர்.

இந்தியா பாகிஸ்தான் எல்லை அருகில் உள்ள முஸாபராபாத் நகரில் இருந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பை இயக்கியவர் அமானுல்லா கான். அவரை 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்பனா பேட்டி கண்டார்.

அப்போது, அவர் ஒரு விஷயத்தை கூறினார். 1984 ஆம் ஆண்டு காஷ்மீர் விடுதலையை ஊக்குவிக்கும் வகையில் சிலரை அனுப்பியதாகவும், அவர்கள் காஷ்மீர் மக்களின் ஆதரவை பெற முடியவில்லை என்று திரும்பிவிட்டதாகவும், இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த காஷ்மீர் மக்கள் தயாராக இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

1984 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்களை எடுத்து போராட்டம் நடத்த விரும்பாத காஷ்மீர் மக்கள், பிறகு எப்படி இப்படி மாறினார்கள்?

 

jammu kashmir current status

 

 

காஷ்மீரில் ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அடிக்கடி கவிழ்த்ததும், மத்திய அரசின் சொற்படி கேட்டு ஆடும் பொம்மை அரசுகளை தேர்தல் மூலம் உருவாக்குவதும்தான் மக்கள் வெறுப்புக்கு முக்கியமான காரணமாக இருந்தது. 1986 ஆம் ஆண்டு ஒரு அரசாங்கத்தை கவிழ்த்தார்கள். அனந்தநாக்கில் மத மோதல்களை உருவாக்கினார்கள். 1987 ஆம் ஆண்டு ஒரு மோசடித் தேர்தல் நடத்தினார்கள்.

அந்த மோசடித் தேர்தலும், அது நடத்தப்பட்ட வேகமும்தான் மக்கள் கோபத்திற்கு காரணமாகியது. அப்போது தொடங்கிய போராட்டம் 30 ஆண்டுகள் முடிந்தும் தொடர்கதையாக நீடிக்கிறது. ஆனாலும் அதிலிருந்து இந்திய அரசு சில பாடங்களைக் கற்றுக் கொண்டது. அதன்காரணமாக மக்கள் ஆவேசம் சற்று குறைந்தது.

காஷ்மீர் மாநில அரசின் அதிகாரிகள், இந்திய பாதுகாப்பு படைகள், அரசியல்வாதிகள், சாதாரண மக்கள் பங்களிப்போடு இந்தியாவின் மதசார்பின்மை, ஜனநாயக நம்பிக்கைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட விரிவாகவும் கவனமாகவும் ஒரு வலை பின்னப்பட்டது. வன்முறைகளும், கல்வீச்சுகளும் தொடர்ந்தாலும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும், மோதல் தவிர்க்கும் நடவடிக்கைகளும் இதை உறுதி செய்தன.

1990களின் தொடக்கத்தில் இருந்த கலவர நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான இந்திய ராணுவத்தினரும், பொதுமக்களும் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அது சீர்குலைந்திருக்கிறது. அச்சத்துடன்கூடிய வாழ்க்கை நிலை மக்களை வாட்டுகிறது. தெருக்கள் போர்க்களமாகி, கலவரங்கள் தொடர்கதையாகின. இப்போது பயணங்களும், வர்த்தகமும், கல்வியும், வழிபாடும் தடைசெய்யப்பட்டுள்ளன.

 

jammu kashmir current status

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை மோடி அரசு தாக்கித் தகர்த்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் செய்த உயிர் தியாகங்கள் அனைத்தும் வீணாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக பிளவு உண்டாக்கப்பட்டது.

அதாவது, இந்திய அரசின் பாகுபாடற்ற தன்மை பாழாக்கப்பட்டது. பாதுகாப்புப்படையின் தலையில் அனைத்து சுமைகளும் ஏற்றப்பட்டன. ஒரு மாதம் ஆன நிலையிலும் மக்கள் அமைதியாக இருப்பதாக அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டது காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு என்ற பிரச்சாரம் தொடர்கிறது.

காஷ்மீரிகள் இப்போது தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கருதுகிறார்கள். அவர்களிடம் இருந்து முதல் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் மீதான அவர்களுடைய உரிமைகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்திய அரசின் கொள்கையும் விலக்கப்பட்டுவிட்டது. பாலக்கோட் தாக்குதல் உள்ளிட்ட அனைத்தும் பாகிஸ்தானை யோசிக்க வைத்திருக்கிறது. ஜம்மு மற்று லடாக் பகுதிகளில் இந்தியர்களை குடியேற்றி ஜனத்தொகையை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்று கருதப்படுகிறது.

காஷ்மீரிகள் தங்களுடைய அடையாளத்துக்காக 400 ஆண்டுகளாக பல்வேறு துரோகங்களை எதிர்கொண்டு இருக்கிறார்கள். காஷ்மீர் வரலாற்றில் உச்சபட்சமான துரோகம் என்பது 370ஆவது பிரிவை ரத்து செய்ததுதான் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்திய அரசு தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதாலும், காஷ்மீரின் மதசார்பற்ற தன்மைக்கு மதசார்பற்ற இந்திய அரசு உறுதி அளிக்கும் என்பதாலும்தான் காஷ்மீர் முஸ்லிம்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள்.

இப்போது, அவர்களுடைய தனியுரிமையை பாதுகாக்கும் பிரிவு நீக்கப்பட்டதால், காஷ்மீர் முஸ்லிம்கள் எதிர்காலம் குறித்து அச்சத்துடன் இருக்கிறார்கள். இப்போதும் மதசார்பற்ற எதிர்காலம்தான் தங்களுக்கு நல்லது என்றே நம்புகிறார்கள்.

 

jammu kashmir current status

 

இந்துக்கள் அதிகம் வாழும் இந்தியாவுடன் இணைய காரணமான 370 ஆவது பிரிவு நீக்கப்பட்ட நிலையில், மதசார்பற்ற தன்மையும் நீக்கப்பட்டிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் கவனத்தை காஷ்மீர் திருப்பியிருக்கிறது. அவர்கள் இந்தத் துரோகத்திற்கு பழிதீர்க்க நேரம் பார்த்திருக்கிறார்கள்.

370 ஆவது பிரிவு என்பது தற்காலிக தீர்வுதான் என்பதை சொல்லும் இந்திய அரசு, காஷ்மீர் மக்கள்தான் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என்பதை சொல்ல மறுப்பது அவர்களை ஆத்திரப்படுத்துகிறது. இந்தியா தனது சட்டபூர்வ கடமையிலிருந்து தவறிவிட்டதாகவே பார்க்கிறார்கள்.

காஷ்மீர் மக்களின் நில உரிமை, வேலைவாய்ப்பு, இனக்குழுத்தன்மை, மதம், கலாச்சார சுதந்திரம் ஆகியவற்றுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காஷ்மீரிகளின் அதிகாரம் மொத்தமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

காஷ்மீரிகளுக்குள் ஒரு சீற்றம் கனன்று கொண்டிருக்கிறது. அதை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தூண்டிவிடும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்து குடியேற்றங்களை உருவாக்கியது. ராணுவத்தைக் கொண்டு எதிர்ப்புகளை அடக்கியது. அதுபோல, காஷ்மீருக்குள் இந்தியா தனது ராணுவத்தின் உதவியோடு, பகையுணர்வு கொண்ட மக்கள்தொகையை எத்தனை காலத்திற்கு அடக்கப் போகிறது என்பதே இப்போது இருக்கிற வினா.

எல்லா வகையிலும் காஷ்மீரில் உருவாகியிருக்கிற சூழல் மிகவும் வித்தியாசமானது. காஷ்மீரு முழுமையாக அடைக்கப்பட்டிருக்கிறது. மக்களுடைய வீடுகளின் முன் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டிருக்கிறது. கைதுகள் தொடர்கின்றன.

எனவேதான், இழப்பதற்கு தங்களிடம் இனி ஏதுமில்லை என்ற முடிவுக்கு காஷ்மீரிகள் வந்திருப்பதாக சொல்கிறார்கள். காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு இதுபோன்ற சீற்றம் மிகுந்த மனநிலைதான் தேவை. அத்தகைய ஒரு சூழலை இந்திய அரசே உருவாக்கியிருக்கிறது. காஷ்மீரிகளின் எதிர்ப்பை இந்திய ராணுவம் இறுக்கமாக கட்டி வைத்திருக்கிறது. அந்த இறுக்கம் சற்று தளர்ந்தால் போதும் என்று காஷ்மீரிகள் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார். 

Next Story

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
A freight train ran without a driver

ஜம்மு - காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களின் பணி மாற்றத்திற்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலை எஞ்சினை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற ரயில் 5 ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி வேகமாக சென்றுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் சரக்கு ரயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் எஞ்சினில் கை பிரேக்கை இழுக்க மறந்து ஓட்டுநர்கள் இறங்கிச் சென்றதாலும், தண்டவாளம் சரிவு காரணமாக ரயில் தானாகப் புறப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதே சமயம் லந்தர் - பதான்கோட் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து கிராசிங்குகளும் உடனடியாக மூடப்பட்டன. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.