Advertisment

காஷ்மீரில் தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை! 

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் பதற்றம். காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலானது. மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு.

Advertisment

jammu and srinagar government applied under section act 144 all parties leaders restricted

குறிப்பாக அம்மாநில முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு. ஸ்ரீநகரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இல்லத்தில் இன்று மாலை அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற நிலையில் 144 தடை உத்தரவு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Advertisment

all education institution close all parties leaders homes India indianarmy. issues jammu and kashmir protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe