ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில், இன்று (13.02.2021) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை மக்களவையில் தாக்கல்செய்தார்.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசியஅமித்ஷா, "இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதால், ஜம்மு- காஷ்மீர்மாநில அந்தஸ்த்து பெறாதுஎனப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள். ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்த்து பெறாதுஎன எங்குமேஎழுதப்படவில்லை. எங்கிருந்து நீங்கள் அந்த முடிவிற்கு வருகிறீர்கள். நான் இந்த அவையில் ஏற்கனவே கூறியுள்ளேன்,மீண்டும் கூறுகிறேன். இந்த மசோதாவிற்கும், ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்திற்கும் எந்தத் தொடர்பும்இல்லை. ஜம்மு-காஷ்மீருக்கு சரியானநேரத்தில் மாநிலஅந்தஸ்து வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அதன்பிறகு மாநிலங்களவையைத் தொடர்ந்து, மக்களவையில் ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா நிறைவேறியது.