Advertisment

பயங்கரவாத தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

Jammu and Kashmir Kathua dt incident 

Advertisment

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது இன்று (08.07.2024) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதி இந்திய ராணுவத்தின் 9வது படையின் கீழ் வருகிறது. பயங்கரவாதிகளின் இந்த துப்பாக்கிச் சூட்டையடுத்து ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் கதுவாவின் மச்சேடி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது எனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe