Skip to main content

"370 வது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம்"- மெகபூபா முப்தி பேட்டி!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

jammu and kashmir former chief minister Mehbooba Mufti pressmeet in delhi


டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று (24/06/2021) மாலை 04.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதேபோல், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

 

ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவது, மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது, மாநில வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.

 

பிரதமர் நரேந்திர மோடியுடனான ஜம்மு- காஷ்மீரின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, "மாதங்களோ, வருடங்களோ ஆனாலும் 370- வது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம்; இது எங்களின் அடையாளம். கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதிக்கு பின் ஜம்மு- காஷ்மீர் மக்கள் நிறைய சிரமங்களில் உள்ளனர். ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முறையை தங்கள் மக்கள் ஏற்கவில்லை. சிறப்பு அந்தஸ்தை நாங்கள் பாகிஸ்தானிடம் இருந்து பெறவில்லை; அதை இந்தியா வழங்கியது" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.