இதனையடுத்து இன்று காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து காரசாரமாக இதுகுறித்த விவாதம் அங்கு நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் ஆதரவு.
நான் கண்டிப்பாக இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பேன். இது கண்டிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றவர்களுடன் ஒட்டவைக்கும். வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை அரசியலாக்க கூடாது. எம்.எல்.ஏவாக இருக்கும் நான் இதை வரவேற்கிறேன் என்று அதிதி சிங் பேட்டியளித்துள்ளார்.