Skip to main content

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா... ஆதரவு தெரிவித்த காங் பெண் எம்.எல்.ஏ...

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 

cong mla

 

 

இதனையடுத்து இன்று காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து காரசாரமாக இதுகுறித்த விவாதம் அங்கு நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
 

இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் ஆதரவு.
 

நான் கண்டிப்பாக இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பேன். இது கண்டிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றவர்களுடன் ஒட்டவைக்கும். வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை அரசியலாக்க கூடாது. எம்.எல்.ஏவாக இருக்கும் நான் இதை வரவேற்கிறேன்  என்று அதிதி சிங் பேட்டியளித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்