Advertisment

70 ஆண்டுகளாக கிடைக்காத குடிநீர் ஜல் ஜீவனால் 3 ஆண்டுகளில் கிடைத்துள்ளது -மோடி பெருமிதம் 

modi

Advertisment

மத்திய அரசால் 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் ஜல் ஜீவன். இத்திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டுக்குள் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீர் வசதி வழங்குவதே நோக்கம் என பிரதமரால் கூறப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் நாட்டின் 52%க்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு தண்ணீர் வசதி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

இன்று காணொளி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர்,"சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் 3 கோடி குடும்பங்களுக்கு கிடைத்த குடிநீர்,தற்போது ஜல் ஜீவன் செயல் படுத்தப்பட்ட 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது இந்திய நாட்டின் 10 கோடி கிராமப்புற குடும்பங்கள் குடிநீர் குழாய் வசதியை பெற்றுள்ளது. இது அரசுக்கு கிடைத்த வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

India modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe