இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017- ஆம் ஆண்டு இவருக்கு மரண தண்டனை விதித்தது. கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக சென்ற போது மார்ச் 3 ஆம் தேதி 2016- ஆம் ஆண்டு குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அரசு ஈரானில் கைது செய்தது. அத்துடன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.

jai shankar

Advertisment

இந்திய அரசின் முறையீட்டால் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குல்பூஷண் ஜாதவ்விற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடக்கூடாது எனவும், குல்பூஷண் ஜாதவ்விற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அவர் பேசும்போது, பாகிஸ்தான் சிறையில் குல்பூ‌ஷன் ஜாதவ் அடைத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. அவர் மீது போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜாதவ் வின் நியாயம் நிரூபணமாகி இருக்கிறது. எனவே குல்பூ‌ஷன் ஜாதவை உடனே விடுதலை செய்ய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றார்.