Skip to main content

11 ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாநில அமைச்சர்...

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

 

Jagarnath Mahto applied to join class 11

 

11 ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்க விண்ணப்பித்துள்ளார் ஜார்க்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்டோ.

 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஜகர்நாத் மஹ்டோ 1995-இல் 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு தனது படிப்பைத் தொடராத அவர், அரசியலில் நுழைந்து தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், 53 வயதான அவர் தற்போது மீண்டும் தனது படிப்பை தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து பேசியுள்ள அவர், "நான் இப்போது 11 ஆம் வகுப்பில் சேர்கிறேன், கடினமாக படிக்க உள்ளேன். நான் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நான் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பதவியில் இருப்பதால், எனது திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது, இது என்னை மிகவும் புண்படுத்தியது. எனவே, முதலில் இடைநிலைத்தேர்வுகளில் வெற்றிபெற்றபிறகு, உயர்கல்வி படிக்கும் விருப்பமும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.  போகாரோ மாவட்டத்தில் உள்ள தேவி மஹ்தோ கல்வி நிலையத்தில் தற்போது இவர் 11 ஆம் வகுப்பு சேர்ந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மரியாதை இல்லை” - பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் முதல்வரின் அண்ணி சீதா சோரன்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 Sita Soran, sister-in-law of former chief minister who joined BJP

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும் தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக, பா.ஜ.க கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி (02.02.2024) பதவியேற்றார்.

 Sita Soran, sister-in-law of former chief minister who joined BJP

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியான சீதா சோரன், அந்த கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை விட்டு விலகி இன்று (19-03-24) அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மேலும், தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீதா சோரன், “கட்சிக்காக நான் 14 ஆண்டுகள் பாடுபட்டிருக்கிறேன். ஆனால் அதற்கான மரியாதை எனக்கு இல்லை. அதன் காரணமாகவே இந்த முடிவுக்கு நான் தள்ளப்பட்டேன். எனது கணவர் துர்கா சோரனின் மரியாதையை காக்கவே, மரியாதை இல்லாத இடத்தில் இருந்து நான் வெளியேறி இருக்கிறேன். மேலும், அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து நான் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறேன். ஜார்க்கண்டை காப்பாற்றுவதில் அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

Next Story

வட மாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Tragedy of North State youth CM MK Stalin's obituary

நீலகிரி மாவட்டம் உதகை வட்டத்திற்கு உட்பட்ட பாபுஷா லைன் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய சூழலில் கட்டுமான பணியின் போது இன்று காலை எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 22) மற்றும் ஜாகீர் (வயது 25) ஆகிய இருவரும் மண்ணில் புதைந்தனர்.

இதனை அறிந்த சக பணியாளர்கள் உடனடியாக இது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் மண்ணில் புதைந்த கூலித் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மண்ணில் புதைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு ரிஸ்வானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதே சமயம் விபத்து நிகழ்ந்த இடத்தின் உரிமையாளர் மேத்யூ (வயது 45), மேற்பார்வையாளர் நசருல்லா (வயது 29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவியை அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று 13.03.2024 முற்பகல் தனியாருக்குச் சொந்தமான கட்டுமான பணியின் போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து இருவர் விபத்தில் சிக்கினர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 22) என்பவர் மீட்கப்பட்டு உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு அரசின் சார்பாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியரை உரிய ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்.

Tragedy of North State youth CM MK Stalin's obituary

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் (வயது 25) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.