Skip to main content

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பார்வையாளர்கள் தினம் அனுசரிப்பு!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

உலக விண்வெளி வாரத்தையொட்டி உச்ச பாதுகாப்பு கொண்ட விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இரண்டு நாட்கள் பார்வையாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
 

விஎஸ்எஸ்சி/ இஸ்ரோ உலக விண்வெளி வாரம் கேரள மாநிலத்தில் உள்ள  திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் கொண்டாடப்படுகிறது. உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட இந்த விண்வெளி மையத்தில் நாளை மற்றும் மறுநாள் அக்டோபர்- 9 மற்றும் அக்டோபர்- 10 ஆகிய தேதிகளில் (இரண்டு நாட்கள்) பார்வையாளர்கள் தினமாக அனுசாரிக்கப்படுகிறது. அதனால் இரு தினங்களுக்கு மட்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பொதுமக்கள் பார்வையாளர்களாக இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

ISRO VIKRAM SARABHAI VISITORS ALLOWED thiruvananthapuram



இந்த இரண்டு நாட்களும் விண்வெளி அருங்காட்சியகத்தையும், ராக்கெட் ஏவுதளத்தையும் கண்டு மகிழலாம். இதற்கு அந்த இரண்டு நாட்களும் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். பார்வையாளர்கள் தங்கள் வருகையை ( தனியாகவோ அல்லது குழுவாகவோ) https://wsweek. Vssc. gov. in  என்ற இணையதள பக்கத்தின் இணைப்பு வழியாக பதிவேற்றி வரிசை எண்ணை பெற்று கொள்ள வேண்டும். இதற்காக பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு ஓரு மணி நேரம் முன்னதாக செல்ல வேண்டும்.

 

ISRO VIKRAM SARABHAI VISITORS ALLOWED thiruvananthapuram






 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.