Skip to main content

அறிவியலில் முடிவுகளை தேடக்கூடாது மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச் செல்லும்-இஸ்ரோ சிவன் 

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

வரும் 14 நாட்களுக்கு சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவின் தென்துருவத்தில் 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது. இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன்,

 

isro shivan


சந்திரயான்-2 திட்டத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. வரும் 14 நாட்களுக்கு சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிப்போம். அறிவியலில் முடிவுகளை தேடக்கூடாது மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே  முடிவுக்கு அழைத்துச் செல்லும். ககன்யான் திட்டதிற்காக  முழுமையாக தயாராகி வருகிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு ஊக்கம் மற்றும் ஆதரவு தரும் சக்தியாக உள்ளார் எனக் கூறிய அவர்,

மேலும் சந்திரன் குறித்த ஆய்வுகள் தொடரும். ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஒரு ஆண்டு என்றாலும் கூடுதல் எரிபொருளால்  7.5 ஆண்டுகள்வரை செயல்பட வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் லேண்டரை படமெடுத்த பிரக்யான் ரோவர்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Pragyan Rover photo taken the Vikram lander

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

 

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.  பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பிரக்யான் ரோவர், இன்று (30.08.2023) காலை 7.35 மணியளவில் சந்திராயன் 2 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த படத்தை  இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும் பிரக்யான் ரோவரில் உள்ள நேவிகேசன் என்ற அதிநவீன கேமரா மூலம் இந்த  புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

செப்டம்பர் 2 இல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1 விண்கலம்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

The Aditya L1 spacecraft will launch on September 2

 

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ ஏவ உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்ல உள்ளது.

 

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆயிரத்து 475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1 இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் ஆதித்யா விண்கலத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.