Advertisment

சூரியனுக்கு செல்லும் இந்திய விண்கலம்- இஸ்ரோ தலைவர் புதிய தகவல்...

நிலவின் தென் துருவம் மற்றும் நிலப்பரப்புகளை ஆராய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலமான சந்திரயான் 2 நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Advertisment

isro plan of sending rocket to sun

கடந்த வாரம் இதனை ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவப்படும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன், "சந்திரயான்-2 விண்கலம் அடுத்த ஒரு மாதத்தில் நிலவு குறித்த தகவல்களை நமக்கு கொடுக்க ஆரம்பிக்கும். திட்டமிட்டப்படி சரியாக தரையிறங்கினால் நிலவில் யாரும் போகாத இடத்தில் சந்திரயான்-2 விண்கலம் நிறுத்தப்படும்.

நிலவின் வடதுருவப் பகுதியைவிட தென்துருவப் பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் அடுத்தாண்டு முதல் பாதியில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற விண்கலத்தை வானில் செலுத்த திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. மங்கள்யான் 2 திட்டமும் விரைவில் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.

CHANDRAYAAN 2 LAUNCHED ISRO Sivan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe