Skip to main content

ஐஆர்எப்சி ஐபிஓ ஜன.18ல் வெளியீடு; 4633 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்!!

Published on 17/01/2021 | Edited on 17/01/2021

 

irfc ipo releasing this week

 

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக பொதுத்துறைக்குச் சொந்தமான, இந்திய ரயில்வே நிதியியல் கழகம் எனப்படும் இந்தியன் ரயில்வே பைனான்சியல் கார்ப்பரேஷன் (ஐஆர்எப்சி) நிறுவனத்தின் ஐபிஓ திங்கள்கிழமை (ஜன. 18) வெளியாகிறது.

 

ரயில்வே துறையின் விரிவாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தை திரட்டிக் கொடுப்பதில் ஐஆர்எப்சி நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது என்பிஎப்சி எனப்படும் வங்கி அல்லாத நிதிச்சேவை நிறுவனம் ஆகும். 

 

பங்கு வெளியீட்டின் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஐபிஓவில் ஒரு பங்கின் விலை 25 - 26 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

 

ஐஆர்எப்சி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும், அதாவது 938 கோடி பங்குகளும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், ஐபிஓ மூலமாக 178.2 கோடி பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. 

 

இதில், ஐஆர்எப்சி நிறுவனம் புதிய பங்குகள் பிரிவில் 118.80 கோடி பங்குகளும், ஆஃபர் ஃபார் சேல் (ஓஎப்எஸ்) பிரிவில் 59.40 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளது. 

 

மொத்தப் பங்குகளில் 50 சதவீதம் வரையிலான பங்குகள் துறை சார்ந்த முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். ஒரு லாட் சைஸ் 575 பங்குகள் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு 14950 ரூபாய். கடந்த 2019ம் ஆண்டு ரயில்வே துறைக்குச் சொந்தமான ஐஆர்சிடிசி ஐபிஓ வெளியிட்டது. அப்போது, இந்தப் பங்கு வெளியீடு பெரும் வெற்றி அடைந்தது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டபோது சில்லரை முதலீட்டாளர்களுக்கு 100 சதவீதம் வரை லாபம் கிடைத்தது. 

 

விரைவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஐஆர்எப்சி பங்கு வெளியீடும் சில்லரை முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.