நவராத்திரிக்காக விரதம் இருக்கும் பயணிகளுக்கென ஸ்பெஷல் உணவு ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ளது. வீரட் தாலிஷ் என்ற பெயரில் வழங்கப்பட இருக்கின்ற இந்த உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 ரயில் நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ரயில் பயணிகளுக்கு இந்த உணவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரயில்வே துறையில் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் புறப்பட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.