do

Advertisment

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் களமிறங்கிய சென்னை அணி பட்டம் வென்று அசத்தியுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி 20 கோடி பரிசுத்தொகையை பெறுகிறது. 2ம் இடத்தை பிடித்துள்ள ஐதராபாத் அணிக்கு 12.5 கோடி பரிசுத்தொகையாகும்.

விறுவிறுப்பு நிறைந்த இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் வாட்சன் சதம் அடித்தார்.