ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு சிறையில் தலையணையோ, நாற்காலியோ கொடுக்கப்படவில்லை. அவர் முதுகு வலியால் அவஸ்தைப்படுகிறார் என்று சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட ப.சிதம்பரம், மூன்று நாட்கள் வரை அறைக்கு வெளியே சேர்கள் இருந்தன. நான் அதை பயன்படுத்தினேன். உடனே அவை அங்கிருந்து எடுக்கப்பட்டு விட்டன. இப்போது எனது அறையின் காவலர் கூட நாற்காலி இல்லாமல் பணி செய்கிறார் என்றார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர்கள், இதெல்லாம் சின்ன விஷயம்தான். சிதம்பரம் சிறைக்குச் செல்லும்போதே அவருடைய அறையில் நாற்காலி இல்லை என்று கூறினார்கள். இதையடுத்து அவருடைய நீதிமன்றக் காவலை அக்டோபர் 3 ஆம் தேதிவரை நீடித்து நீதிபதி அஜய்குமார் உத்தரவிட்டார்.