ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மூன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தும் நிலையில் கார்த்தி சிதம்பரமும், நளினியும் சிறைக்கு வருகை புரிந்துள்ளனர்.