Advertisment

விவசாயிகள் போராட்டம்... அமைதிக்காக உள்துறை எடுத்த நடவடிக்கை!

farmers

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகப் போரட்டம்நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்றுட்ராக்டர்பேரணி நடத்தினர். இதில்வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து சிலவிவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன.

Advertisment

இருப்பினும் பல்வேறு விவசாயஅமைப்புகள், டெல்லிஎல்லையில் தொடர்ந்துபோராட்டத்தைதொடர்ந்துவருகின்றன. நேற்று விவசாயிகளை எல்லையில் இருந்து வெளியேறக்கோரி, அவர்களின்டென்டுகளை கிழிக்கஒரு கும்பல்முயன்றது. இதனால்,இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்துக் கலவரமாக மாறியது. பிறகு, போலீஸார்தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும்நிலையைக் கட்டுக்குள்கொண்டுவந்தனர்.

Advertisment

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டிவிவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும்சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரிஎல்லைகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (31.01.21) இரவு 11 மணி வரை இணையசேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.பொதுப் பாதுகாப்பைப் பேணவும், அவசர நிலையைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

farm bill Farmers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe