ADVERTISEMENT

விவசாயிகள் போராட்டம்: இணைய சேவை முடக்கத்தை நீட்டித்தது மத்திய அரசு!

01:19 PM Feb 01, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போரட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து சில விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன. இருப்பினும் பல்வேறு விவசாய அமைப்புகள், டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றன.

இந்தநிலையில் 29 ஆம் தேதி விவசாயிகளை எல்லையில் இருந்து வெளியேறக் கோரி, அவர்களின் டென்ட்டுகளைக் கிழிக்க ஒரு கும்பல் முயன்றது. இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்துக் கலவரமாக மாறியது. பிறகு, போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி எல்லைகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று (31.01.21) இரவு 11 மணி வரை இணைய சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அந்த பகுதிகளில் செய்யப்பட்ட இணைய சேவை முடக்கம் நாளை (02.02.2021) இரவு 11 மணிவரை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT