கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

Advertisment

kargil

இந்த நடவடிக்கைக்கு எதிராக வதந்திகள் பரவலாம், அதனால் வன்முறைகள் ஏற்படக்கூடும் என்று பல பகுதிகள் இணையதள சேவை முடக்கப்பட்டது. ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்னமும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

Advertisment

அண்மையில் அந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதால் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பதற்றமான சூழ்நிலைகளிலுள்ள பகுதிகளில் மட்டும் இணையதள சேவை வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் 145 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது.

Advertisment