நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெடை பியூஷ் கோயல் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைட்ரோ கார்பன் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவீனங்களை குறைக்கும் வகையில் உள்நாட்டில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்தியா புதிதாக தொழில்கள் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ளது என தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை பெருக்க அவசர நடவடிக்கை; இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு...
Advertisment