Skip to main content

சடலத்துடன் உடலுறவு?; கொடூரன் கைது

 

intercourse with a dead body; Murderer arrested

 

மனைவியைக் கொன்று கணவன் சடலத்துடன் உடலுறவு கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கேரள மாநிலம் ஆலுவா அருகே தோட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் வேலை செய்து வந்தார். மகேஷ் குமாரின் மனைவி ரத்தினவள்ளி. இவர் தென்காசி சேர்ந்தவர். இந்நிலையில் திடீரென ரத்தினவள்ளி தோட்டத்தில் சடலமாக கொடூரமான நிலையில் கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்தபோது சடலத்துடன் உடலுறவு கொண்டதற்கான அடையாளங்களை இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

 

பின்னர் ரத்தினவள்ளியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பாக கணவன் மகேஷ் குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் பொழுது மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்ததாக மகேஷ் குமார் கொண்டார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !