Skip to main content

பும்ரா மீது ஊக்கமருத்து சோதனை!இந்திய வீரர்கள் அதிர்ச்சி!

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு நேற்று ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. நேற்று பயிற்சியில் இருந்த போது வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் சோதனைக்காக அழைத்து சென்றனர்.அப்போது பும்ராவுக்கு இரண்டு கட்டங்களாக சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் முதலில் சிறுநீர் சோதனையும் அதனை தொடர்ந்து 45 நிமிடங்கள் கழித்து ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டகாக கூறுகின்றனர். 
 

jasprit bumrah



இந்த சோதனை குறித்து வெளியான தகவலை மைதான அதிகாரிகளும், இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.நாளை இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் சோதனை குறித்து அறிக்கை வராமல் இருப்பது இந்திய வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பும்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைக்காக காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒருமுறையாவது மணிப்பூருக்கு வாருங்கள்” - பிரதமருக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த வீரர்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
tearful plea to PM Modi and says Come to Manipur at least once

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கடந்தாண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இதனையடுத்து, மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. இருந்த போதிலும், அங்கு சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில், குத்துச் சண்டை வீரர் ஒருவர், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா உள்விளையாட்டு அரங்கத்தில் MFN 14 (எம்.என்.எஃப்) நடத்தப்படும் தற்காப்பு கலை எனும் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கிடைக்கப்பெறும் சாம்பியன் பட்டத்திற்காக அறிமுக வீரர் முகமது ஃபர்ஹாத் மற்றும் மணிப்பூர் வீரரான சுங்ரெங் கோரன் ஆகியோர் போட்டியிட்டனர். 

இந்த போட்டியில், இறுதியாக சுங்ரெங் கோரன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். பட்டத்தை வென்ற பிறகு மணிப்பூர் வீரரான சுங்ரெங் கோரன், மணிப்பூரை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான வீடியோவில் அவர் பேசியதாவது, “இது எனது தாழ்மையான வேண்டுகோள். மணிப்பூரில் வன்முறை நடக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. மக்கள் உயிரிழந்து வருகின்றனர், பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.

இந்த நிவாரண முகாம்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே , தயவு செய்து மணிப்பூருக்கு ஒருமுறை சென்று மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பட்டம் வென்ற மணிப்பூர் வீரர், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.