Skip to main content

ஏர்டெல் நிறுவனத்தில் 13 வருடம் அனுபவம் கொண்டவர் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி...!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

இந்தியாவின் இரண்டாம் பெரும் தகவல் தொழில்நுட்பம் நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நிலஞ்சன் ராய் (Nilanjan Roy) நியமிக்கப்பட்டுள்ளார். 

 

i

 

 

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த எம்.டி ரங்கநாத் கடந்த நவம்பர் 16, 2018 அன்று தன் பதவியில் இருந்து வெளியேறினார். அதன் பின்  இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக ஜெயேஷ் சங்க்ராஜ்கா நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 17 நவம்பர் 2018 முதல் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்று அந்தப் பதவியில் செயல்பட்டுவந்தார். 

 

தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிலஞ்சன் ராய் வரும் 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம், 1-ம் தேதி முதல் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் ஜெயேஷ் சங்க்ராஜ்கா, அவரின் பொறுப்பில் இருந்து வெளியேறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


நிலஞ்சன் ராய் இதற்குமுன் ஏர்டெல் நிறுவனத்தில் உலகளாவிய தலைமை நிதி அதிகாரியாக பணி புரிந்துள்ளார். மேலும் ஏர்டெல் நிறுவனத்தில் 13 வருடங்களும், யூனிலிவர் நிறுவனத்தில் 15 வருடங்களும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவிக்கு எம்.பி. பதவி; பிரதமர் மோடி வாழ்த்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Greetings Prime Minister Modi for Infosys founder's wife gets MP post

மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்களின் பதவிக்கான சீட்டுகள் உள்ளன. இதில், 238 எம்.பிக்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 12 எம்.பி.க்கள், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ நியமிக்கப்படுவார்கள். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்படும். 

அந்த வகையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தியை மாநிலங்களவை எம்.பியாக ஜனாதிபதி திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். 

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியக் குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரை செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது. மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது ‘மகளிர் சக்தி’க்கு ஒரு சக்தி வாய்ந்த சான்றாகும். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

1950 ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்த சுதா மூர்த்தி, எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்டவர். எழுத்துத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையில் முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுதா மூர்த்தி, உலக பணக்காரரான பில்கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதாரத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். சுதா மூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மருமகன் பிரிட்டன் பிரதமராவது பெருமையளிக்கிறது” - இன்போசிஸ் நாராயணமூர்த்தி

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

 'I am proud to have my son-in-law as Prime Minister of Britain' - Infosys Narayana Murthy

 

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு  வலுப்படும் எனவும் கருதப்பட்டது.

 

ஆனால் அதற்கு மாறாக பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியில் இருந்த பிரிட்டன் லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் முறைப்படி பிரதமராக அறிவித்தார். அதன்பின் எலிசபெத் ராணியின் உயிரிழப்பு இங்கிலாந்தை சோகத்திற்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி, மினி பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் அடுத்தடுத்து பல்வேறு அமைச்சர்கள் பதவி விலகினர்.

 

இதனால் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் கடந்த 20 ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் பதவிக்கு மீண்டும் ரிஷி சுனாக் போட்டியிட்ட நிலையில் அவர்தான் பிரிட்டனின் அடுத்த பிரதமர் என அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்பொழுது பிரிட்டனின் பிரதமராக  ரிஷி சுனாக் பொறுப்பேற்றுள்ளார். அதிகப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்ற ரிஷி சுனாக்கை பிரதமராக்க மன்னர் 3 ஆம் சார்லஸ் ஒப்புதலளித்த நிலையில் அவர் தற்பொழுது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

 

 'I am proud to have my son-in-law as Prime Minister of Britain' - Infosys Narayana Murthy

 

இதனால் இங்கிலாந்து வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரிட்டன்  பிரதமர் ஆகிறார் என்பதும், பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் “ரிஷி பிரிட்டன் பிரதமராவது பெருமை அளிக்கிறது” என நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். “மருமகன் ரிஷி பிரதமராக பதவியேற்றிருப்பது பெருமை அளிக்கிறது. அவரை வாழ்த்துகிறேன். அவர் பிரிட்டன் மக்களுக்காக தன்னால் முடிந்ததை செய்வார் என நம்புகிறேன்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.