Skip to main content

வருமானவரித்துறை இணையதள பிரச்சனை: இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.க்கு மத்திய அரசு சம்மன்!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

nirmala seetharaman

 

வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்குப் புதிய வசதிகளைத் தரவும், வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தவும் புதிய இணையதளத்தை உருவாக்க முடிவுசெய்த மத்திய அரசு, அந்தப் பொறுப்பினை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் வழங்கியது. இன்ஃபோசிஸ் நிறுவனம், புதிய வருமான வரித்துறை இணையதளத்தை உருவாக்கி கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்தது.

 

இருப்பினும் இந்தப் புதிய இணையதளத்தில் பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும் என தொடர்ந்து உறுதியளித்துவந்த மத்திய நிதியமைச்சர், தொழிநுட்பக் கோளாறுகளை சரி செய்யும்படி தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அறிவுறுத்திவந்தார்.

 

இருப்பினும் புதிய வருமான வரித்துறை இணையதளத்தில், தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்துவருகின்றன. மேலும், நேற்று முன்தினத்திலிருந்து (21.08.2021) நேற்று மாலைவரை இணையதளம் முடங்கியது. இந்தநிலையில், இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டரை மாதங்களாகியும் அதிலுள்ள குறைபாடுகள் களையப்படாதது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் அளிக்குமாறு இன்ஃபோசிஸின் தலைமைச் செயல் அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து, இன்ஃபோசிஸின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து புதிய இணையதளத்தில் தொடரும் பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவிக்கு எம்.பி. பதவி; பிரதமர் மோடி வாழ்த்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Greetings Prime Minister Modi for Infosys founder's wife gets MP post

மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்களின் பதவிக்கான சீட்டுகள் உள்ளன. இதில், 238 எம்.பிக்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 12 எம்.பி.க்கள், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ நியமிக்கப்படுவார்கள். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்படும். 

அந்த வகையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தியை மாநிலங்களவை எம்.பியாக ஜனாதிபதி திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். 

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியக் குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரை செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது. மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது ‘மகளிர் சக்தி’க்கு ஒரு சக்தி வாய்ந்த சான்றாகும். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

1950 ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்த சுதா மூர்த்தி, எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்டவர். எழுத்துத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையில் முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுதா மூர்த்தி, உலக பணக்காரரான பில்கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதாரத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். சுதா மூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

எம்.பி. வீட்டில் ரூ.351 கோடி பறிமுதல்; மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
jharkhand congress MP Rs.351 crore seized at home; information released by the Central Board of Direct Taxes

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுவுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்து எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. அதன் அடிப்படையில், ஒடிசாவில் 6 இடங்கள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மற்றும் மேற்கு வங்கத்தில் சில இடங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று (21-12-23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, “ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரபலத்தின் குடும்பத்தினரால் டிஸாவில் நிர்வகிக்கப்படும் பெளத் மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிரான வருமான வரிச்சோதனையில், பெருமளவிலான வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ஏராளமான ஆவணங்கள், பண ரசீதுகளின் விவரங்கள், பணம் எங்கு மாற்றப்பட்டது என்பதற்கான குறிப்புகள் அடங்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதில், ரூ.351 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாத ரொக்கப் பணமும், கணக்கில் வராத ரூ.2.80 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும் பகுதி பணம், ஒடிசாவின் சிறு நகரங்களில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடங்கள், மறைக்கப்பட்ட அறைகள், மறைக்கப்பட்ட இல்லங்கள், ரகசிய அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணமானது, நிறுவனத்தின் கணக்கில் காட்டப்படாத வருமானம் என்பதை அந்நிறுவனத்தின் முக்கிய ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.