Skip to main content

அரசு, ராணுவம், பேஸ்புக், வாட்ஸ் அப் என 16.8 கோடி பேரின் தகவல் திருட்டு - 9 பேர் கைது

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

 Information theft of 16.8 crore people like government, army, Facebook, WhatsApp- 9 people arrested

 

இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள், கோடீஸ்வரர்கள் என சுமார் 16.8 கோடி பேரின் தகவல்களைத் திருடியதாக 9 தனி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

நாட்டின் மிகப்பெரிய 6 வங்கிகள் உட்பட பல வங்கிகளின் இணையதளங்களுக்குள் ஊடுருவி 9 பேர் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. இவர்கள் தனி நபர்களின் தகவல்கள் மட்டுமல்லாமல் அரசின் ரகசியத் தகவல்களையும் திருடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இணையதளங்களில் ஊடுருவி தகவல்களைத் திருடிய 9 பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத்தைச் சேர்ந்த சைபராபாத் போலீசார் கைது செய்துள்ளது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தனி நபர் தகவல் திருட்டு மோசடி இது என போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் 1.1 கோடி பேர் மற்றும் பேஸ்புக் பயன்படுத்தும் 75 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. 1.2 கோடி வாட்ஸ்அப் பயனர்கள், டெல்லி அரசின் 35 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தகவல்களும் திருடப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணிபுரியும் 2.5 லட்சம் வீரர்கள் பற்றிய தகவல்களையும் திருடி உள்ளது.

 

மேலும் இந்த 9 பேர் கொண்ட கும்பல், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பற்றிய தகவல்களையும் திருடியது அம்பலமாகியுள்ளது. இப்படி பல கோடி பேரின் தகவல்களைத் திருடிய 9 பேரும் டெல்லி மற்றும் புனேவை சேர்ந்தவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் வாடிக்கையாளர் பெயர், பணி, விவரம், ஆதார் எண், பான் கார்டு எண், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்கள், ஒவ்வொருவரின் முகவரி, தொலைப்பேசி எண்கள், வங்கியில் உள்ள இதர விவரங்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் பற்றிய விவரங்களை திருடி 140 வகைகளாகப் பிரித்து பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.