Skip to main content

ஓரினசேர்க்கை குற்றமல்ல தீர்ப்பிற்கு பிறகு திருமணத்திற்கு தயாராகும் இந்தியாவின் முதல் திருநங்கை அரசு அதிகாரி!!

Published on 10/09/2018 | Edited on 10/09/2018

 

transgender

 

ஓரினசேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு இந்தியாவின் முதல் திருநங்கை அரசு அதிகாரியான ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும், திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஐஸ்வர்யா ரிதுபர்ணா பிரதான் என்ற 34 வயதான திருநங்கையான இவர் டெபுடி கமிஷ்னராக ஒரிசாவிலுள்ள கமர்சியல் டாக்ஸ் துறையில் உள்ளார். இந்தியாவின் முதல் அரசு அதிகாரியாக அறியப்படும் இவர் ஓரினசேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தன் திருமண ஆசையை கூறி தன் ஆண் நண்பரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதுபற்றி அவர் கூறுகையில், என்னுடைய ஆண் நண்பர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு மூன்று வருடத்திற்கு முன்பே அவரது காதலை வெளிப்படுத்தினார் ஆனால் அப்போது ஓரினசேர்கை தவறு என குறிப்பிடும் சட்டவிதி 377 காரணமாக நான் அதற்கு விருப்பம் தெரிவிக்காமல் குழப்பத்தில் இருந்தேன். ஆனால் அண்மையில் ஓரினசேர்க்கை தவறல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தாங்கள் அடுத்தவருடம் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். மேலும் தங்கள் திருமணம் நீதிமன்றத்தின் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் நடக்கவிருக்கிறது. எங்கள் திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வாழவிருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் தன்னை பற்றி குறிப்பிடுகையில், எனது அப்பா ஓய்வுபெற்ற ராணுவவீரர். சிறுவயதில் அவர் எப்போதும் என்னை ஆண் போல இரு என கூறுவார் ஆனால் எனக்குள் ஒரு பெண்மைதான் இருந்துது. எனது சிறுவயதில் சகோதரியின் உடைகளை அணிந்துகொள்வேன். படிக்கு வயதில் விடுதியில் சக நண்பர்கள் மூலம் தொல்லைகள் இருந்தது என குறிப்பிட்டார். 

 

திருநங்கையான ஐஸ்வர்யா,  ரதிகண்டா பிரதான் என்ற பெயரில் கனபகிரி கிராமத்தில் பிறந்து கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரிசா வணிக சேவையில் அதிகாரியாக சேர்ந்தார். அவர் திருநங்கை என்றாலும் உடலளவில் ஆணாகவே இருந்தார். அதன்பின் மனதால் பெண்ணாக இருந்த அவர் 2015-ல் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெயரையும் ஐஸ்வர்யா என மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.