Advertisment

கரோனாவின் கோரமுகம்: இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

corona

இந்தியாவில் தினசரி கரோனாபாதிப்பு நேற்று சற்று அதிகரித்தநிலையில், இன்று வெகுவாக குறைந்துள்ளது. நேற்று ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 433 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் கடந்த 24 மணிநேரத்தில்1 லட்சத்து 49 ஆயிரத்து 394 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளதாகமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்ட 1072 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கரோனாவால்பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 55 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு 5 லட்சம் கரோனாஉயிரிழப்புகளைச் சந்தித்த நாடாகஇந்தியா மாறியுள்ளது.

Advertisment

அமெரிக்காவில் 9 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும், பிரேசிலில் 6 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் கரோனாவால்உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணிநேரத்தில்2 லட்சத்து 46 ஆயிரத்து 674 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

pandemic
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe