Advertisment

ஈரானில் இருந்து 58 பேரை மீட்டுவந்த இந்திய விமானப்படை...

சீனாவின்வூஹான்நகரிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கியகரோனாவைரஸ்உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர்கரோனாபரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்3800க்கும்மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரானில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து மீன்பிடி தொழில்புரியச்சென்ற மீனவர்கள் மற்றும் மாணவர்கள்உள்படப்பல நூறு பேர் இரானில் சிக்கி இருந்தனர். அவர்களில் முதல் கட்டமாக 58 பேரை இந்திய விமானப்படை இன்று மீட்டு வந்துள்ளது.

Advertisment

indians rescued from corona affected iran parts

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஈரானில்கரோனாதொற்றால் 7,161 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 237 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில்அங்குச்சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜெய்ஷங்கர்தெரிவித்திருந்தார். அதன்படிஇன்று முதல்கட்டமாக இந்திய விமானப் படையைச்சேர்ந்த'சி-17குளோப்மாஸ்டா்' போக்குவரத்து ரக விமானம் மூலம் 58 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த விமானம் டெல்லி காஜியாபாத்தில் உள்ள இந்தியவிமானப்படைத்தளத்தில் தரை இறங்கியுள்ளது.

corona virus iran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe