Skip to main content

"இளவரசர் ஹாரி என்னை ஏமாற்றிவிட்டார்; கைது வாரண்ட் பிறப்பியுங்கள்" - நீதிமன்றத்தை அதிரவைத்த இந்தியப் பெண்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

prince harry

 

இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான ஹாரி, தனது மனைவியுடன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி சாதாரண குடிமக்களாக வசித்து வருகின்றார். இந்தநிலையில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் இளவரசர் ஹாரி, திருமணம் செய்துகொள்வதாக தனக்கு வாக்குறுதி தந்ததாகவும், தற்போது அதனை மீறிவிட்டதாகவும் கூறியிருந்தார். எனவே இளவரசர் ஹாரிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்தப் பெண் வலியுறுத்தியிருந்தார்.

 

தன்னுடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, ஹாரி பெயரிலான கணக்கோடு உரையாடிய சில இ-மெயில் ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். இந்த வழக்கு விசாரணையின்போது இங்கிலாந்திற்கு எப்போதாவது சென்றதுண்டா என நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு அவர் இல்லை எனப் பதிலளித்ததோடு, தாங்கள் சமூகவலைதளங்களில் மட்டுமே பேசிக் கொண்டதாக தெரிவித்தார்.

 

விசாரணையின் முடிவில், இந்த வழக்கு ஒரு பகல் கனவு காணுபவரின் கற்பனை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், வழக்கை தொடர்ந்த பெண், போலி வலைதளக் கணக்குகளுடன் பேசியிருக்கலாம் என்றும், அந்த உரையாடல்களைச் சார்ந்து நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியாது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, உங்களோடு உரையாடிய இளவரசர் ஹாரி, பஞ்சாபில் கிராமத்தில் உள்ள ஏதேனும், இணையதள மையத்தில் அமர்ந்திருக்கலாம் எனவும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.