Advertisment

குடியரசுத் தலைவருக்கு பைபாஸ் சர்ஜரி; வெற்றிகரமாக நிறைவு! - பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்!

ramnath kovind

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்குகடந்த 26 ஆம் தேதி காலை, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத்தலைவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராணுவ மருத்துவமனையிலிருந்துடெல்லியில் உள்ளஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன்று (30.03.2021) இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், குடியரசுத்தலைவர்ராம்நாத் கோவிந்திற்கு, பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், எய்ம்ஸ் இயக்குனரிடம், குடியரசுத்தலைவரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகக் கூறியுள்ள அவர், குடியரசுத்தலைவரின் ஆரோக்கியத்திற்காகவும், அவர் விரைவில் குணமடையவும்பிரார்த்திப்பதாகத்தெரிவித்துள்ளார்.

Surgery Bypass Ramnath kovind
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe