சவேரா குழுமத்துடன் சேர்ந்து இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பெட்ரோல் பங்க் நிலையங்களில் உணவகத்தை திறக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதில் முதல் உணவகமாக அமராவதி நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

Advertisment

ii

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகள் மொத்தம் 2,250 இருக்கிறது எனவும், அதில் 130 பங்குகள் நெடுஞ்சாலையில் உள்ளது எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பெட்ரோல் பங்க் நிலையங்களில் எல்லாம் விரைவில் இதுபோன்ற உணவகங்களை திறக்கபோவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.