இதனால் ஒரே குடும்பத்தில் இரண்டு கட்சியினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் பட்டேல் சமூக இட ஒதுக்கீட்டிற்காக போராடிய ஹர்திக் பட்டேல் குஜராத்தில் ஜாம்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய நிலையில் குஜராத்தில் பட்டேல் இனத்தினர் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். இதற்கு ஹர்திக் பட்டேலே முழு பொறுப்பு என குஜராத் உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் மனு செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹர்திக் பட்டேலுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஏப்ரல் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜாம்நகர் மக்களவை தொகுதியில் ஹர்திக் பட்டேலுக்கு பதிலாக முலு கந்தோரியாவிற்கு சீட் வழங்கியது காங்கிரஸ் கட்சி.
பி.சந்தோஷ், சேலம் .