Indian Corona Status today

Advertisment

இந்தியாவில் இதுவரை 3.23 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (19.08.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு 3,23,22,258 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் இந்தியா முழுவதும் 36,401 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில்39,157 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,25,080 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.51 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது. இந்தியாவில்நேற்று முன்தினம்ஒரேநாளில்440 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று உயிரிழப்பு சற்று அதிகரித்துஒரேநாளில்530 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,33,049 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 3,64,129 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Advertisment

இந்தியாவில் நேற்று ஒரேநாளில்56,36,336கரோனாதடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இதுவரை போடப்பட்ட கரோனாதடுப்பூசி எண்ணிக்கை 56.64 கோடியாக உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இதுவரை 2,76,46,321கரோனாதடுப்பூசி போடப்பட்டுள்ளதுஎன மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.