ADVERTISEMENT

"இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்கிறது" - பிரதமர் மோடி பேச்சு!

05:07 PM Jul 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவது கோ-வின் செயலி மூலம் நெறிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோ-வின் செயலி மென்பொருளை மத்திய அரசு உலகநாடுகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 50 நாடுகள், தங்கள் நாட்டில் கோ-வின் செயலியைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கோ-வின் செயலியை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்வது தொடர்பான கோ-வின் உலகளாவிய மாநாடு இன்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, கலந்துகொண்டு உரையாற்றினார்.

கோ-வின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:

தொற்றுநோயால் பறிபோன அனைத்து உயிர்களுக்காகவும் எனது உண்மையான இரங்கலைத் தெரிவிக்கவும். 100 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு தொற்றுநோய்க்கு இணையாக வேறெந்த தொற்று நோயுமில்லை. எந்தவொரு நாடும், அந்த நாடு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இது போன்ற ஒரு சவாலைத் தனியாகத் தீர்க்க முடியாது என்பதை அனுபவம் காட்டுகிறது. கரோனாவிற்கெதிரான நமது போராட்டத்தில் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த ஒன்றாகும். அதிர்ஷ்டவசமாக, மென்பொருள் என்பது வளத்திற்கான தடைகள் இல்லாத ஒரு பகுதி. அதனால்தான் தொழில்நுட்ப ரீதியாக வெற்றியடைந்தவுடன், எங்கள் கரோனா கண்காணித்தல் மற்றும் தடமறிதல் செயலி பயன்பாட்டைத் திறந்த மூலமாக (open source) மாற்ற முடிவெடுத்தோம்.

தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக வெளிவர மனிதகுலத்திற்கான சிறந்த நம்பிக்கை தடுப்பூசி. ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவில் நாங்கள், எங்கள் தடுப்பூசி யுக்தியைத் திட்டமிடும் போதே, முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையைப் பின்பற்ற முடிவு செய்தோம். இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறது. அதனால்தான் கரோனா தடுப்பூசிக்கான எங்கள் தொழில்நுட்ப தளம் திறந்த மூல மென்பொருளாக மாற்றப்படவுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT