Skip to main content

"இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்கிறது" - பிரதமர் மோடி பேச்சு!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

narendra modi

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவது கோ-வின் செயலி மூலம் நெறிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோ-வின் செயலி மென்பொருளை மத்திய அரசு உலகநாடுகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 50 நாடுகள், தங்கள் நாட்டில் கோ-வின் செயலியைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில் கோ-வின் செயலியை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்வது தொடர்பான கோ-வின் உலகளாவிய மாநாடு இன்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, கலந்துகொண்டு  உரையாற்றினார்.

 

கோ-வின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:

 

தொற்றுநோயால் பறிபோன அனைத்து உயிர்களுக்காகவும் எனது உண்மையான இரங்கலைத் தெரிவிக்கவும். 100 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு தொற்றுநோய்க்கு இணையாக வேறெந்த தொற்று நோயுமில்லை. எந்தவொரு நாடும், அந்த நாடு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இது போன்ற ஒரு சவாலைத் தனியாகத் தீர்க்க முடியாது என்பதை அனுபவம் காட்டுகிறது. கரோனாவிற்கெதிரான நமது போராட்டத்தில் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த ஒன்றாகும். அதிர்ஷ்டவசமாக, மென்பொருள் என்பது வளத்திற்கான தடைகள் இல்லாத ஒரு பகுதி. அதனால்தான் தொழில்நுட்ப ரீதியாக வெற்றியடைந்தவுடன், எங்கள் கரோனா கண்காணித்தல் மற்றும் தடமறிதல் செயலி பயன்பாட்டைத் திறந்த மூலமாக (open source) மாற்ற முடிவெடுத்தோம். 

 

தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக வெளிவர மனிதகுலத்திற்கான சிறந்த நம்பிக்கை தடுப்பூசி. ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவில் நாங்கள்,  எங்கள் தடுப்பூசி யுக்தியைத் திட்டமிடும் போதே, முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையைப் பின்பற்ற முடிவு செய்தோம். இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறது. அதனால்தான் கரோனா தடுப்பூசிக்கான எங்கள் தொழில்நுட்ப தளம் திறந்த மூல மென்பொருளாக மாற்றப்படவுள்ளது.

 

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.