ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
புல்வாமா தாக்குதலை விட மோசமான தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுக்கும் அளவு மோசமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவம் மற்றும் கடற்படை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை அறிக்கை வந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட 7 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கடல் வழியாகவும் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதால் இந்திய கடற்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போர் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.