Skip to main content

நீண்ட தூர விமானப் பாதையில் சாதனை படைத்த இந்தியப் பெண் விமானிகள்!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

women pilots

 

உலகின் மிகத் தூரமான பாதையில் விமானம் இயக்கி இந்திய விமானிகள் சாதனை படைத்துள்ளனர்.

 

வட துருவத்தின் வழியாக விமானம் இயக்க திறமையும், அனுபவமும் வேண்டும் என்கிற நிலையில், வட துருவத்தின் வழியாக சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு 16,000 கிலோ மீட்டர்கள் பறந்து பெண் விமானிகள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

 

ஏர் இந்தியா நிறுவனம், சான் பிரான்சிஸ்கோ மற்றும் பெங்களூருக்கு விமான சேவையைத் தொடங்கும் விதமாக, இந்தியப் பெண் விமானிகள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இந்த விமானிகள் குழுவில் ஒருவரான கேப்டன் சோயா அகர்வால், இளம்வயதில் 'போயிங்' ரக விமானத்தை இயக்கிய பெண் விமானி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் சாதனையை நிகழ்த்திய விமானிகள் குழுவிற்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "நினைவிற்கொள்ளத்தக்க, கொண்டாடத்தக்க ஒரு கணத்தில் இருக்கிறோம். இந்திய சிவில் பெண் விமானிகள், வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள். சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வட துருவத்திற்கு மேலே பறந்து, பெங்களுருவில் தரையிறங்கியதற்கு கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர் மற்றும் கேப்டன் சிவானி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

 

"வட துருவத்தின் வழியாக சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருவுக்கு, ஏர் இந்தியாவின் மிக நீண்ட விமானப் பயணத்தை நிறைவு செய்த அனைத்துப் பெண்கள் காக்பிட் குழுவினருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.

Next Story

துக்க வீட்டிற்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த சோகம்; திட்டக்குடியில் பரபரப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Six women were injured in an electric shock at a funeral home and were admitted to hospital

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ் செறுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது முருகானந்தம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலைச் சொந்த கிராமமான கீழ் செறுவாய் கிராமத்திற்கு அவரது உறவினர்களால் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இறந்து போன முருகானந்தம் உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். அவர்களில் சிலர் சவப்பெட்டியை சுற்றிலும் நின்று கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர். அப்போது சவப்பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை யாரும் எதிர்பாராத நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் கனகவல்லி, ராஜாம்பாள், லலிதா, கௌரி, மகேஸ்வரி, கருப்பாயி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் சவப்பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.