சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 500 வது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் 500வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது நாள் கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாக்பூரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 49.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், பும்ரா,விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு பூஜியம் என இந்தியா முன்னிலை வகித்து வரும் நிலையில் அடுத்த போட்டி மார்ச் எட்டாம் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.