Advertisment

10 லட்சம் பேருக்கு அதிவிரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்!

fg

Advertisment

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள்முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,உலகிலேயே முதன்முறையாக 10 லட்சம் பேருக்கு அதிவிரைவாகத் தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe