Skip to main content

காளையை வீழ்த்திய கரடி! சரிவில் இந்தியப் பங்குச்சந்தைகள்!! இன்று எப்படி இருக்கும்?

Published on 25/06/2020 | Edited on 25/06/2020


 

india share market nifty and sensex for today

 

தொடர்ந்து நான்கு நாள்களாக ஏற்றத்தில் இருந்த இந்தியப் பங்குச்சந்தைகள், புதன்கிழமை திடீரென்று கரடியின் பிடிக்குள் சிக்கிக் கொண்டன. ஒரே நாளில் தேசிய பங்குசந்தையான நிப்டி 165.70 புள்ளிகளும், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 561.45 புள்ளிகளும் சரிந்தன. அதனால் இன்றும், நாளையும் கையிருப்பில் உள்ள பங்குகளில் ஏற்றம் தென்படும் பட்சத்தில், அவற்றை விற்று கணிசமான லாபம் பார்த்துவிடுவது உகந்தது என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள். 

 

நிப்டியில் ஏற்றம் கண்ட பங்குகள்:

 

புதன்கிழமை (ஜூன் 24) காலையில் நிப்டியின் தொடக்கம் (10529.25) நன்றாக இருந்தாலும், நேரம் செல்லச்செல்ல சரிவைச் சந்தித்தன. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 10,553.15 புள்ளிகளும் சென்றது. குறைந்தபட்சமாக 10,281.95 புள்ளிகள் பதிவானது. இறுதியில் 10,305.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிப்டியில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில் நேற்று (ஜூன் 24) வெறும் 10 பங்குகள் மட்டுமே விலை உயர்ந்தன. 39 பங்குகளின் மதிப்பு சரிந்தன. ஒரு பங்கின் விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

 

என்றாலும், ஏஷியன் பெயிண்ட்ஸ் 3.81 சதவீதம், ஐடிசி 3.38 சதவீதம், ஐஷர் மோட்டார்ஸ் 3.12 சதவீதம், ஹீரோ மோட்டார்ஸ் 2.94 சதவீதம், கெயில் 2.92 சதவீதம் வரை ஆதாயம் அளித்தன. கடந்த நான்கு நாள்களாக வங்கிப் பங்குகள் ஆதாயம் அளித்து வந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., இண்டஸ் இந்த் வங்கி பங்குகளும், பவர் கிரிட், ஹிண்டால்கோ, ஸீ என்டர்டெயிண்மென்ட் பங்குகளும் வீழ்ச்சி கண்டன.

 

india share market nifty and sensex for today

 

சென்செக்ஸ் நிலவரம்: 

 

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இண்டெக்ஸ் நேற்று முன்தினம் (ஜூன் 23) 3,5430 புள்ளிகளில் முடிந்திருந்த நிலையில், நேற்றும் 35,679.74 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதிகபட்சமாக 35,706 புள்ளிகள் வரை சென்றது. பின்னர் சரியத் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 34,868 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. குறைந்தபட்சமாக 34,794.93 புள்ளிகளுக்கும் சென்றது.

 

சென்செக்ஸில் எம்.ஆர்.பி.எல். 18.72 சதவீதம், ஹட்சன் 11.17 சதவீதம், செண்ட்ரம் 9.84 சதவீதம், பேஜ் இண்டியா 8.36 சதவீதம், ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கி 7.92 சதவீதம், டிரில் 18.79 சதவீதம் ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் கொடுத்தன. சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள 30 பங்குகளில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் அளித்தன. 23 பங்குகள் பெரும் சரிவை கண்டிருந்தன.

 

நிபுணர்கள் சொல்வது என்ன?:

 

பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவு என்பது, ''ஒரு தலைகீழ் அல்லது ஒருங்கிணைப்பு கட்டத்தின் தொடக்கமாக இருக்கலாம்,'' என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். இந்தச் சரிவிலும் ஒரு நல்ல சேதி என்னவெனில், நிப்டி 50- ஐ பொருத்தவரை 10300 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருப்பதுதான். இன்று நிப்டி 10,050 புள்ளிகள் வரை சரியக்கூடும் எனத் தெரிகிறது.

 

ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வினோத் நாயர், விழாயக்கிழமையும் இந்தியப் பங்குச்சந்தைகள் நிலையற்றதாக இருக்கும். அதனால் முதலீட்டாளர்கள் கூடுமான வரை பங்குகளில் ஏற்றம் இருப்பின், அவற்றை விற்று லாபம் பார்த்துவிடுவது நல்லது என்கிறார். 

 

கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சஹாஜ் அகர்வால், ''பரந்த சந்தை, பலவீனத்தின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் குறிக்கிறது. இது லாப முன்பதிவு அல்லது ஒருங்கிணைப்புக்கான வாய்ப்பைக் குறிக்கிறது. 

 

குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு இந்தச் சரிவு நல்ல சமிக்ஞை கிடையாது. ஆனால், நடுத்தர கால ஆதாயத்தின்பேரில் பங்குகளை வாங்கி வைத்திருப்போருக்கு, குறிப்பாக ஆட்டோமொபைல், உலோக பங்குகளில் முதலீடு செய்திருப்போருக்கு அடுத்து வரும் காலங்களில் கணிசமான ஆதாயம் கிடைக்கலாம்,'' என்கிறார்.

 

ரேலிகர் பங்குத்தரகு நிறுவனத்தின் ஆய்வாளர் அஜித் மிஸ்ரா, ''நிப்டியின் இயக்கம் எதிர்பார்த்த திசையில்தான் இருக்கிறது. இப்போது அடுத்த திசை நகர்வுக்கு முன்னர் அது சில ஒருங்கிணைப்புகளைக் காணலாம். உள்நாட்டுச் சந்தையில் எந்த ஒரு பெரிய நிகழ்வும் இல்லாத நிலையில், பங்கேற்பாளர்கள் உலகளாவிய சந்தைகளின் போக்கை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்,'' என்றார்.

 

புரட்டி எடுத்த உலகச்சந்தைகள்:

 

வால் ஸ்ட்ரீட் மார்க்கெட் எனப்படும் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை, தலால் ஸ்ட்ரீட்டிலும் (இந்தியச் சந்தைகள்) எதிரொலித்தது. அமெரிக்காவில் கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலையால் நாஸ்டாக் 1.09 சதவீதம் வரை சரிவடைந்தது. அதேபோல் ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் புதன்கிழமை சரிவடைந்தன. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட சந்தைகளில் சராசரியாக 1.50 சதவீதம் வரை பங்குச்சந்தைகள் சரிந்தன.

 

தொழில்நுட்ப வல்லுநர்கள் சொல்வது என்ன?:

 

கடந்த சில நாள்களாக தொடர்ந்து காளையின் ஆதிக்கத்தில் இருந்த நிப்டியின் தினசரி அட்டவணையில் நேற்று மாறுதல் ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் அருண்குமார், ''காளையின் ஆதிக்கம் தொடர்ச்சியாக இருந்தால், அதே அளவு கரடியின் தாக்கமும் இருக்கும் அல்லது சில ஒருங்கிணைப்புகள் இருக்கும் என்பதெல்லாம் பங்குச்சந்தைகளில் எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். ஜூன் காலாண்டின் கணக்குகளை முடிக்க வேண்டும் என்பதால், இன்று (வியாழக்கிழமை) தேசிய பங்குச்சந்தையில் மேலும் சரிவு ஏற்படலாம். அதாவது, 10,050 புள்ளிகள் வரை சந்தையில் இறக்கம் தென்படும்,'' என்கிறார்.

 

india share market nifty and sensex for today

 

நிப்டியின் புதிய வரம்பு நிர்ணயம்:

 

தேசிய பங்குச்சந்தை இன்றும், நாளையும் 10,100 முதல் 10,150 புள்ளிகள் வரை சரியக்கூடும். வரும் மாதத்தில் 10,500 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. 

 

காளையின் அறிகுறிகள் உள்ள பங்குகள்:

 

சந்தைச் சரிவில் இருந்தாலும் முந்தைய காலாண்டு முடிவுகளின்படி சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் அளிக்கும் எனத்தெரிகிறது.

 

ஐ.எப்.சி.ஐ., எல் அண்டு டி, டாபர் இண்டியா, ஐ.ஓ.எல். கெமிக்கல்ஸ், ஜூபிலன்ட் புட் ஒர்க்ஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், காலண்ட் இஸ்பேட், காட்ப்ரே பிலிப்ஸ், கிளாரியன்ட் கெமிக்கல்ஸ், கெம்பேப் ஆல்கலைஸ், கோத்தாரி பெட்ரோகெம், அட்லாண்டா, இண்டியா மார்ட் இண்டர்மெஷ், எலக்ட்ரோதெர்ம், விபுல், அனிக் இண்டஸ்ட்ரீஸ் மற்றும டிடிகே பிரெஸ்டீஜ் ஆகிய பங்குகள் இன்றும் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்குகள்:

 

http://onelink.to/nknapp

 

முதலீட்டாளர்கள் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், இன்பிபீம் அவென்யூஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ரேலீஸ் இண்டியா மற்றும் எஸ்கார்ட்ஸ் ஆகிய பங்குகளை போட்டிப்போட்டு வாங்கி வருகின்றனர். அதே நிலை இன்றும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

கரடியின் பிடியில்...

 

ஒட்டுமொத்த அளவில் இந்தியப் பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலும் கரடியின் ஆதிக்கம் தொடரும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள். ஏனெனில், நேற்றைய வர்த்தக நேர முடிவில் பிஎஸ் 500-இல், 358 பங்குகள் சரிவடைந்தன. 140 பங்குகள் மட்டுமே ஓரளவு ஆதாயம் அளித்தன. அதன் செண்டிமென்ட்தான் இன்றும், நாளையும் தொடரும் என்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.