இந்தோனேசியாவிற்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பிய இந்தியா!

india-indonesia

மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனேசியா, கரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் அளவிற்கு நிலை மோசமாக இருக்கிறது.

மேலும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் அந்தநாட்டில்49, 000 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. இந்தநிலையில்இந்தோனேசியாவிற்கு உதவும் வகையில் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனையும் இந்தியா அந்தநாட்டிற்கு, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பலில்அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலையின் போது கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அப்போது இந்தியாவிற்கு 1400ஆக்சிஜன்செறிவூட்டிகளைஇந்திய செஞ்சிலுவை சங்கம் மூலமாக இந்தோனேசியா அனுப்பிவைத்ததுகுறிப்பிடத்தக்கது.

corona virus India Indonesia oxygen
இதையும் படியுங்கள்
Subscribe