/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (61).jpg)
இந்தியாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில், தற்போது தினசரி கரோனாபாதிப்பு எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்ட 703 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்2 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேர் கரோனாபாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இதற்கிடையே, நாட்டில் ஒமிக்ரான்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9,692ஆக உயர்ந்துள்ளது.
Follow Us