Advertisment

201 நாட்களுக்கு பிறகு வெகுவாக குறைந்த தொற்று... குறையும் உயிரிழப்புகள்!!

ுபர

இந்தியாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.இரண்டாம் அலை உச்சத்தின்போது இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. கடந்த 10 நாட்களாக தினசரி 25 முதல் 32 ஆயிரம் வரையிலான கரோனா தொற்று பதிவாகிவந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இந்த எண்ணிக்கை 26 ஆயிரம் என்ற அளவில் இருந்துவந்தது.

Advertisment

இதற்கிடையே, நேற்று (27.09.2021) பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சனிக்கிழமை - 26,938, நேற்று முன்தினம் - 26,314 என பதிவான தொற்று, நேற்று - 18,795 என்ற அளவில் பதிவாகியுள்ளது. மேலும், ஒரே நாளில் 26,432 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 3.37 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று காரணமாக 179 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக இதுவரை 4.47 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 201 நாட்களுக்குப் பிறகு தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe