Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் 219 பேர் பலி; 38 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!

ுரப

கரோனா இரண்டாம்அலையின் தீவிரம் காரணமாக பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பல்வேறு நிபுணர்களும் கூறிவரும் நிலையில்,இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக 40 ஆயிரம் என்ற அளவில் இருந்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 38,948 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 219 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

Advertisment

நோய் தொற்றிலிருந்து நேற்று (05.09.2021) ஒரே நாளில் 43,903 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 3.30 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3.21 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 4.04 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 68.75 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisment

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe