இந்தியாவில் தினசரி கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்துகொண்டேசென்றநிலையில், இன்று கரோனாபாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில்1 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில்1 லட்சத்து 68 ஆயிரத்து 63 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில்கரோனாபாதிக்கப்பட்ட 277 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்69 ஆயிரத்து 959 பேர் கரோனாவிலிருந்துமீண்டுள்ளனர். இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1247 பேருக்கும், ராஜஸ்தானில் 645 பேருக்கும், டெல்லியில் 546 பேருக்கும்ஒமிக்ரான்உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் 1, 711 பேர்ஒமிக்ரான்பாதிப்பிலிருந்து மீண்டுள்ள்ளதாகமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.