corona

Advertisment

இந்தியாவில் தினசரி கரோனாபாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில்3 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில்கரோனாவால் பாதிக்கப்பட்ட 491 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்2 லட்சத்து 23 ஆயிரத்து 990 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இதற்கிடையே நாட்டில் ஒமிக்ரான் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,287ஆக அதிகரித்துள்ளது.