Advertisment

corona

இந்தியாவில் கரோனாமூன்றாம் அலை ஏற்பட்டதில், 3 லட்சத்தைத் தாண்டிய தினசரி கரோனாபாதிப்பு, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில்2 லட்சத்து 9 ஆயிரத்து 918 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று 2 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கடந்த 24 மணிநேரத்தில், கரோனவால் பாதிக்கப்பட்ட 959 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்2 லட்சத்து 62 ஆயிரத்து 628 பேர் கரோனாபாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கரோனா உறுதியாகும் சதவீதம் 15.77 சதவீதமாக இருந்து வருகிறது.