209 நாட்களில் மிகக்குறைவான தினசரி கரோனா பாதிப்பை பதிவு செய்த இந்தியா! 

india corona

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலையின்போது, தினசரி 4 லட்சம் பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியானது. அதன்பிறகு படிப்படியாக நாட்டில் கரோனாபாதிப்பு குறையத்தொடங்கியது. இந்தநிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்18,346 பேருக்கு மட்டுமே கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது கடந்த 209 நாட்களில் பதிவான குறைந்தபட்ச தினசரி கரோனாபாதிப்பு எண்ணிக்கையாகும். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், 2,52,902 கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீள்பவர்களின் சதவீதம் 97.93 ஆக இருப்பதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் அதிக தினசரி பாதிப்பு பதிவாகிவரும் மாநிலமான கேரளாவில் நேற்று (04.10.2021) 8,850 பேருக்கு மட்டுமே கரோனாஉறுதியானது. அது நாட்டின் மொத்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையிலும்எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

India union health ministry
இதையும் படியுங்கள்
Subscribe